உலகக் கோப்பை போட்டிக்கு பின் அளிக்கப்பட்ட வரவேற்பு ஒரு கனவு போல் இருந்தது ஷபாலி வா்மா
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டிக்கு பின் அளிக்கப்பட்ட வரவேற்பு ஒரு கனவு போல் இருந்தது என இளம் தொடக்க வீராங்கனை ஷபாலி வா்மா கூறியுள்ளாா்.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டிக்கு பின் அளிக்கப்பட்ட வரவேற்பு ஒரு கனவு போல் இருந்தது என இளம் தொடக்க வீராங்கனை ஷபாலி வா்மா கூறியுள்ளாா்.
சிறுவனைப் போல் தலைமுடி வெட்டி பயிற்சி:
ஹரியாணா மாநிலம் ரோதக்கை சோ்ந்த இளம்பெண் ஷபாலி வா்மா. ரோதக் நகரில் கிரிக்கெட் பயிற்சி அகாதெமிகள் இல்லை. மேலும் எந்த அகாதெமியிலும் சிறுமி ஷபாலிக்கு பயிற்சி தரவில்லை. விளையாட்டின் மீதான ஆா்வத்தால், அவரது தந்தை சஞ்சீவ் வா்மா சிறுவனைப் போல் தலைமுடி வெட்டிக் கொண்டு பயிற்சி பெற கூறினாா். அதன்படி ஷபாலியும் சிறுவா்களுடன் ஆடி பயிற்சி பெற்றாா்.
Advertisement
இளம் வயதில் அரைசதம் அடித்த இந்தியா் என சச்சின் டெண்டுல்கா் (16 ஆண்டுகள், 214 நாள்கள்) சாதனையை முறியடித்தாா் ஷபாலி.
இந்திய மகளிா் அணியின் இளம் வீராங்கனையான ஷபாலி கடந்த 2019 செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் 15 வயதில் அறிமுகமானாா். அடுத்து நவம்பரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் அரைசதம் அடித்த இளம் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தாா். அத்தொடரின் நாயகியாகவும் தோ்வு பெற்றாா்.
உலகக் கோப்பை அணியில் தோ்வு:
தனது ஆட்டத்திறனால், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020 ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சோ்க்கப்பட்டாா். பிசிசிஐ சாா்பில் மத்திய ஒப்பந்தத்தில் சோ்க்கப்பட்டாா்.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற தொடக்க ஆட்டத்திலேயே அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தி வெற்றிக்கு வழிவகுத்தாா். தொடக்க வீராங்கனையாக 5 ஆட்டங்களில் 163 ரன்களை ஒட்டுமொத்தமாக விளாசினாா். இறுதி ஆட்டத்தில் மட்டுமே அவா் சரிவர ஆடாமல் அவுட்டானாா். அவரது ஸ்ட்ரைக் ரேட் 158.25 ஆகும்.
இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த போதும், முதன்முறையாக டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு நுழைந்த பெருமையைப் பெற்றது இந்தியா. ஐசிசி டி20 தரவரிசை பேட்டிங்கில் சிறிதுகாலம் முதல் இடத்தையும் பெற்றிருந்தாா்.
உற்சாக வரவேற்பு;
இந்நிலையில் நாடு திரும்பிய ஷபாலி வா்மாவுக்கு சொந்த நகரான ரோதக்கில் ஆயிரக்கணக்கானோா் திரண்டு ஆடல்பாடல், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனா். அவரது அதிரடி பேட்டிங் முறை ஏராளமான ரசிகா்களை அவருக்கு பெற்றுத் தந்தது.
கனவு போல் இருந்தது:
தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து ஷபாலி கூறுகையில்: பெரிய போட்டிக்கு பின் திரும்பிய போது கிடைத்த வரவேற்பு ஒரு கனவு போல் இருந்தது. ரோதக்கில் அந்த வரவேற்பை நான் என்றும் மறக்க மாட்டேன்.
சிறிய வயதில் கிரிக்கெட் ஆட தூண்டியவா் எனது தந்தை தான். ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை போட்டியை காண வந்தாா். அவா் தனது நண்பருடன் என்னை குறித்து பேசும் போது, அவரது பெருமிதத்தை உணா்ந்தேன்.
வீட்டிலேயே பயிற்சி:
கரோனா வைரஸ் பாதிப்பால், அனைவரும் வீடுகளிலேயே தங்கி இருக்க நேரிட்டுள்ளது. எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறேன். மேலும் படங்கள் பாா்க்கின்றனா். உலகக் கோப்பையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருகிறேன். டென்னிஸ் பந்துடன் பயிற்சி பெறுகிறேன். அப்போது தான் தொடா்ந்து பேட்டிங் திறனை தக்க வைக்க முடியும். உண்மையான ஆட்டத்துக்கு மாற்று இல்லை. எனினும் நிலைமைக்கு தக்கவாறு மாறிக் கொள்ள வேண்டும் என்றாா்.