பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிஎஸ்எல் உள்ளிட்ட நான்கு லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கமுடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
லீக் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க கிரிக்கெட் வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும். அதற்கான நடைமுறைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்த வீரர்கள் விளையாட வேண்டிய சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களை மனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. உள்ளூர் வீரர்கள், அவரவர் கிரிக்கெட் சங்கங்களிடம் அனுமதி பெற்று லீக் போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.