செய்திகள்

ஜனவரியில் இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர்: இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர், அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர், அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 37,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இலங்கையில் 2 டெஸ்டுகள் விளையாட இருந்தது இங்கிலாந்து அணி. இதற்காக இலங்கைக்குச் சென்று 10 நாள்கள் தங்கியிருந்து ஒரு பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்றது. பிறகு கரோனா அச்சுறுத்தல் காரணமாக டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர், அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐசிசி அட்டவணைப்படி அடுத்த வருடம் ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. எனினும் இந்தத் தொடர் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT