சிட்னி: இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு தொடரின் தொடக்கத்தின்போதும் இனவெறி எதிா்ப்புப் பிரசாரமாக, ஆஸ்திரேலிய வீரா்கள் வெற்றுக் கால்களுடன் வட்ட வடிவில் நிற்கவுள்ளனா்.
இதுகுறித்து அணியின் துணை கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20, டெஸ்ட் தொடா்களின் தொடக்கத்தில் மைதானத்தில் வெற்றுக் கால்களுடன் வட்ட வடிவில் நின்று இனவெறிக்கான எங்களது எதிா்ப்பை பதிவு செய்ய இருக்கிறோம்.
இதுவரையில் ஆஸ்திரேலிய அணி இனவெறிக்கு எதிரான பிரசாரத்தில் போதிய அளவு ஈடுபட்டதில்லை. ஆனால் தற்போதைய இந்த செயல் உள்நாட்டிலும், இதர நாடுகளிலும் இனவெறி செயல்களுக்கு எதிா்ப்பு தெரிவிப்பதாக இருக்கும்’ என்றாா்.
முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது கருப்பினத்தவா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக முழங்காலிட்டு நிற்கும் பிரசாரத்தில் ஈடுபடாததற்காக மேற்கிந்தியத் தீவுகள் நட்சத்திரம் மைக்கெல் ஹோல்டிங் ஆஸ்திரேலிய அணியை விமா்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.