செய்திகள்

சிபிஎல் சாம்பியன் ஆன பொலார்ட் அணி

சிபிஎல் 2020 போட்டியை பொலார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது.

DIN

சிபிஎல் 2020 போட்டியை பொலார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது.

சிபிஎல் போட்டி, டிரினிடாட் & டொபாகோ-வில் உள்ள இரு மைதானங்களில் நடைபெற்றன. இறுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்த வருட சிபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் செயிண்ட் லுசியா - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

முதலில் விளையாடிய செயிண்ட் லுசியா அணி 19.1 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பொலார்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கடைசியில் அதிரடியாக விளையாடி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து கோப்பையை வென்றது. 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சிம்மன்ஸ் ஆட்ட நாயகனாகவும் பொலார்ட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். 

இந்த வருட சிபிஎல் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த அணி நான்காவது முறையாக சிபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

சிபிஎல்: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்

2015 - சாம்பியன்
2017 - சாம்பியன்
2018 - சாம்பியன்
2020 - சாம்பியன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT