செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியாவில் நடத்தவே முயற்சி செய்கிறோம்: கங்குலி

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியாவில் நடத்தவே முயற்சி செய்து வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி - மார்ச் மாதங்களில் இந்தியாவில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. எனினும் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய மைதானங்களில் நடத்தவே முயற்சி செய்து வருகிறோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, ஷார்ஜா, துபை என மூன்று மைதானங்கள் இருப்பது சாதகமானது. மும்பையிலும் வான்கடே, சிசிஐ பிரபோர்ன், டிஒய் படேல் என மூன்று மைதானங்கள் உள்ளன. ஈடன் கார்டன்ஸ் மைதானமும் உள்ளது. 

கரோனா பாதுகாப்பு வளையத்தை நாம் உருவாக்க வேண்டும். நம் இதயம் உள்ள இந்தியாவில் தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நடத்த விரும்புகிறோம். கரோனா நிலவரத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT