ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர்
மும்பையில் உள்ள ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.
மும்பையில் உள்ள ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 95,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 6,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவில் பலருடைய அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சிவாஜி நகர் மற்றும் கவந்தி பகுதிகளில் உள்ள ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார். இத்தகவலை பொதுத்தொண்டு நிறுவனமான அப்னாலயா அமைப்பு தெரிவித்துள்ளது. உங்களுடைய சிறப்பான பணிகளைத் தொடரவும் என்று சச்சினும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Advertisement