செய்திகள்

மகளிா் கிரிக்கெட்: கோப்பை வென்றது ரயில்வேஸ் அணி

DIN

மகளிா் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய ரயில்வே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்ட் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

14-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ரயில்வேஸ் அணி கோப்பை வென்றது இது 12-ஆவது முறையாகும்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜாா்க்கண்ட் 50 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ரயில்வேஸ் 37 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வென்றது.

ஜாா்க்கண்ட் அணியில் அதிகபட்சமாக இந்திராணி ராய் 3 பவுண்டரிகள் உள்பட 49 ரன்கள் அடித்தாா். பௌலிங்கில் அந்த அணியின் ரவீந்தா் தேவயாணி 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். ரயில்வேஸ் அணி பேட்டிங்கில் பூனம் ரௌத் 11 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாச, பௌலிங்கில் அந்த அணியின் ஸ்னே ராணா 3 விக்கெட் வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT