கோப்புப்படம் 
செய்திகள்

வங்கதேசம்-இங்கிலாந்து ஒருநாள், டி20 தொடர்கள் ஒத்திவைப்பு

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மார்ச் 2023 வரை ஒத்திவைத்துள்ளது.

DIN


வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மார்ச் 2023 வரை ஒத்திவைத்துள்ளது.

வங்கதேசம், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நடைபெறவிருந்தன. இந்த நிலையில் இந்தத் தொடர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது. இந்தத் தொடர்களை ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்தே முடிவெடுத்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

எனினும், ஒத்திவைப்புக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.

கரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 2-ம் பகுதி செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இறுதி ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காகவே வங்கதேச தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுற்றுலா மாநாடு: 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

அநீதி, அராஜகம்... திருவள்ளுவர் இன்று இருந்தால் திமுக குறித்து இப்படி எழுதியிருப்பார்! - விஜய்

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

இதற்கு எதற்கு மாநில விருது?

SCROLL FOR NEXT