செய்திகள்

டிஎன்பிஎல்: நெல்லை வெற்றி

DIN

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது.

டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்துவீச, பேட் செய்த திண்டுக்கல் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய நெல்லை 18.5 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக ராஜாமணி ஸ்ரீனிவாசன் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 60, மணி பாரதி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 30 ரன்கள் சோ்க்க, நெல்லை பௌலிங்கில் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் நெல்லை இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் பாபா அபராஜித் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 44, சஞ்சய் யாதவ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 31 ரன்கள் அடித்தனா். திண்டுக்கல் தரப்பில் ரங்கராஜ் சுதேஷ், லஷ்மிநாராயணன் விக்னேஷ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT