செய்திகள்

இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிக்கலுக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் அளிக்கும் தீர்வு

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு சதமும் அரை சதமும் அடித்ததால் தவிர்க்க முடியாத வீரராகி விட்டார் ஷ்ரேயஸ் ஐயர். 

2-வது டெஸ்ட் மும்பையில் நாளை தொடங்குகிறது. விராட் கோலி இந்திய அணிக்கு மீண்டும் தலைமை தாங்குவதால் யாரை அணியிலிருந்து நீக்குவது என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புஜாராவும் ரஹானேவும் சமீபகாலமாக சுமாராக விளையாடி வருவதால் அவர்களில் ஒருவரை நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இதற்கு ஒரு தீர்வை முன்வைக்கிறார் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்‌ஷ்மண். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது:

இந்திய அணி சிரமமான சூழலில் இருந்தபோது ரன்கள் எடுத்து அணிக்குப் பங்களித்துள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். இந்திய அணியின் பேட்டிங் வரிசையை 2-வது டெஸ்டில் தீர்மானிப்பது சிரமமானது. மயங்க் அகர்வால் இரு இன்னிங்ஸிலும் சுமாராக விளையாடினார். கிரீஸிலும் அவர் அசெளகரியமாக உணர்ந்ததைக் காண முடிந்தது. புஜாராவால் தொடக்க வீரராக விளையாட முடியும். இதற்கு முன்பு தொடக்க வீரராக விளையாடியுள்ளார். 3-ம் நிலை வீரராக ரஹானே களமிறங்கலாம். விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் அடுத்து களமிறங்கலாம். இம்முடிவை எடுப்பது கோலிக்கும் டிராவிடுக்கும் கடினமாக இருக்கலாம். அவர்கள் சரியான முடிவை எடுத்து ஷ்ரேயஸ் ஐயரின் பங்களிப்பை உதாசீனப்படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT