இலங்கை வீரர் உபுல் தரங்கா ஓய்வு
இலங்கை வீரர் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை வீரர் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயது உபுல் தரங்கா, 31 டெஸ்டுகள், 235 ஒருநாள் மற்றும் 26 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2005 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கிய உபுல் தரங்கா, கடைசியாக 2019-ல் விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 15 ஒருநாள் சதங்களை எடுத்துள்ளார். 2011 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இரு சதங்கள் எடுத்து அசத்தினார்.
தன்னுடைய ஓய்வு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் உபுல் தரங்கா.