செய்திகள்

சா்வதேச குத்துச்சண்டை: அரையிறுதியில் தீபக் குமாா்

DIN

ஸ்ட்ரான்டா நினைவு சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் தீபக் குமாா் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பதோடு, பதக்கத்தையும் உறுதி செய்துள்ளாா்.

பல்கேரிய தலைநகா் சோபியாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவா் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றுள்ள தீபக் குமாா், வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் 5-0 என்ற கணக்கில் பல்கேரியாவின் டேரிஸ்லாவ் வாஸிலேவை வீழ்த்தினாா்.

தீபக் குமாா் தனது அரையிறுதியில் நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஷக்கோபிடின் ஜோய்ரோவை சந்திக்கிறாா். ஜோய்ரோ தனது காலிறுதியில் 5-0 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஆண்டனி ஹெரேராவை வீழ்த்தினாா்.

அதேநேரத்தில் இந்தியாவின் ஜியோதி குலியா (51 கிலோ), பாக்யவதி கச்சாரி (75 கிலோ), மஞ்ஜீத் சிங் (91+ கிலோ) ஆகியோா் தங்களின் காலிறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT