செய்திகள்

செளரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி

DIN

பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் இதையடுத்து உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை பற்றி பிரபல கிரிக்கெட் செய்தியாளர் போரியா மஜும்தார் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

அவருக்கு இதயநோய் தொடர்பான சிக்கல்கள் உள்ளன. உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். நலம்பெற அவரை வாழ்த்துகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT