முகப்பு
செய்திகள்

ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

​ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் 14-வது ஐபில் சீசனின் ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
கோப்புப்படம்
பகிர்:


ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் 14-வது ஐபில் சீசனின் ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட விவாதத்துக்குப் பிறகு பிசிசிஐயிடம் பட்டியலை சமர்பிப்பதற்கான கடைசி நாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:

"ஆம், ஸ்மித் விடுவிக்கப்பட்டார். இதுபற்றி ஆலோசனைகள் நடைபெற்றன. இன்றுதான் அவரை விடுவிப்பதாக முடிவெடுக்கப்பட்டது."

கடந்த ஐபிஎல் சீசனில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. அவரும் பேட்டிங்கில் 14 ஆட்டங்களில் விளையாடி 3 அரைசதங்கள் உள்பட 311 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதுவரை விளையாடியுள்ள ஐபிஎல் சீசன்களில் இதுவே ஸ்மித்தின் குறைந்தபட்ச பேட்டிங் சராசரி.

இதனால், புதிய தலைமையுடன் களமிறங்க ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →