செய்திகள்

ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

DIN


ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் 14-வது ஐபில் சீசனின் ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட விவாதத்துக்குப் பிறகு பிசிசிஐயிடம் பட்டியலை சமர்பிப்பதற்கான கடைசி நாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:

"ஆம், ஸ்மித் விடுவிக்கப்பட்டார். இதுபற்றி ஆலோசனைகள் நடைபெற்றன. இன்றுதான் அவரை விடுவிப்பதாக முடிவெடுக்கப்பட்டது."

கடந்த ஐபிஎல் சீசனில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. அவரும் பேட்டிங்கில் 14 ஆட்டங்களில் விளையாடி 3 அரைசதங்கள் உள்பட 311 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதுவரை விளையாடியுள்ள ஐபிஎல் சீசன்களில் இதுவே ஸ்மித்தின் குறைந்தபட்ச பேட்டிங் சராசரி.

இதனால், புதிய தலைமையுடன் களமிறங்க ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT