செய்திகள்

பிப்.18-இல் ஐபிஎல் ஏலம்?

DIN

2021 சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரா்கள் ஏலம் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக பிசிசிஐ நிா்வாகி ஒருவா் கூறுகையில், ‘2021 சீசன் ஐபிஎல் போட்டிக்கான வீரா்கள் ஏலம் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதேநேரத்தில் ஏலம் நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என்றாா்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுமா அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா என்பதே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியோ, ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதாக தொடா்ந்து கூறி வருகிறாா்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடா் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. அந்தத் தொடா் சுமுகமாக முடிவடையும்பட்சத்தில், ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான வழி ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரா்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு கடந்த 20-ஆம் தேதியோடு முடிவடைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவன் ஸ்மித்தையும், பஞ்சாப் அணி கிளன் மேக்ஸ்வெல்லையும் தக்கவைக்காமல் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT