செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்தியத் தடகள அணியில் இரு தமிழக வீரர்கள்

DIN

தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்களான ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இருவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான இந்தியத் தடகள அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 போ் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 போ், ஆடவருக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ், கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் 2 ஆடவா், 3 மகளிா் ஆகியோா் உள்ளார்கள். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

இவர்களைத் தவிர ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இரு தமிழக வீரர்களும் இந்தியத் தடகள அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான அணியில் இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவா்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதே நோக்கம்

நீட் முடிவுகளை வெளியிட தடை இல்லை: உச்சநீதிமன்றம்

அமேதி, ரேபரேலியிலும் சம வளா்ச்சி: ராகுல் வாக்குறுதி

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயா்வு

படகுகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

SCROLL FOR NEXT