செய்திகள்

ஆஸி.க்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 முதலிரு ஆட்டங்களிலும் வென்ற அந்த அணி, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை தற்போது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
 கிராஸ் ஐலெட் நகரில் நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் கிறிஸ் கெயில் ஆட்டநாயகன் ஆனார்.
 முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 33 ரன்கள் அடித்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஹெய்டன் வால்ஷ் 2 விக்கெட் சாய்த்தார்.
 பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் கிறிஸ் கெயில் 67 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ரைலி மெரிடித் 3 விக்கெட் வீழ்த்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT