செய்திகள்

இந்திய டென்னிஸ் சங்கம் மீது ரோஹன் போபண்ணா குற்றச்சாட்டு

DIN

ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவது பற்றி தவறாக வழிநடத்தியதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் மீது ரோஹன் போபண்ணா குற்றம் சாட்டியுள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு டென்னிஸ் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகலும் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - அங்கிதா ராணாவும் தகுதி பெற்றுள்ளார்கள். ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா - சுமித் நாகல் ஆகிய இருவரும் தகுதி பெறவில்லை.

எனினும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவது பற்றி தவறாக வழிநடத்தியதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் மீது ரோஹன் போபண்ணா குற்றம் சாட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் எங்களுடைய வாய்ப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. காயம், உடல்நலக்குறைவு போன்ற காரணங்களைத் தவிர ஜூன் 22 அன்று காலக்கெடு முடிந்தபிறகு எந்த ஒரு மாற்றமும் அனுமதிக்கப்படாது என்பதில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெளிவாக இருந்தது. ஆனால் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் - வீரர்கள், அரசாங்க, ஊடகம் போன்றவற்றைத் தவறாக வழிநடத்தியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT