நாமக்கல்லில் நடைபெற்ற இளையோருக்கான மாநில அளவிலான கிராம விளையாட்டுப் போட்டியில் செஸ் பிரிவில் சென்னை மேற்கு முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி திருஷா முதலிடம் பிடித்தார். 10-ஆம் வகுப்பு மாணவியான திருஷா, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான செஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த விளையாட்டுப் போட்டியை இந்திய விளையாட்டுக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்நாடு கிராமப்புற இளைஞர் விளையாட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்தது.