இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நார்த் சவுண்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி, 49 ஓவர்களில் 232 ரன்கள் எடுத்தது. குணதிலகா 52 ரன்களும் கேப்டன் கருணாரத்னே 52 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தார்கள். நடுவரிசை வீரர்கள் சொதப்பியபோதும் ஆஷென் பண்டாரா 50 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல ஸ்கோர் எடுக்க உதவினார். ஹோல்டரும் ஜேசன் முகமதும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
எளிதான இலக்கை 47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஷாய் ஹோப் 110 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது அவருக்கே கிடைத்தது.
2-வது ஒருநாள் ஆட்டம், நாளை (மார்ச் 12) நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.