சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் செளரப் செளத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தில்லியில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இரண்டாவது நாள் போட்டி இன்று (மார்ச் 20) தொடர்ந்தது.
உலகின் 4-ம் நம்பர் வீரரான இந்தியாவின் செளரப் செளத்ரி 243.2 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அவருக்கு அடுத்தபடியாக மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா 221.8 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.
மற்றொரு வீரர் ஷாஜார் ரிஸ்வி 177.1 புள்ளிகளுடன் 5-ம் இடம் பிடித்துள்ளார்.