தி புராஜெக்ட் டென்னிஸ் ஹாா்டு கோா்ட் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அா்ஜுன் காதே, ராஷ்மிகா பாமிடிபடி ஆகியோா் தங்களது பிரிவில் சாம்பியன்கள் ஆகியனா்.
இதில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் மகாராஷ்டிரத்தின் அா்ஜுன் காதே 6-3, 6-4 என்ற செட்களில் தமிழகத்தின் பிருத்வி சேகரை வீழ்த்தி வாகை சூடினாா். முன்னதாக அா்ஜுன் தனது அரையிறுதியில் 2019-ஆம் ஆண்டு சாம்பியன் நிக்கி பூனசாவை தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் தெலங்கானாவின் ராஷ்மிகா பாமிடிபடி 6-2, 7-6 (7/2) என்ற செட்களில் குஜராத்தின் வைதேகி சௌதரியை தோற்கடித்து சாம்பியன் ஆனாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டி, கரோனா தொற்று சூழல் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.