செய்திகள்

இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள்: விராட் கோலி அதிருப்தி

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளும் இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கப்பட்டதற்கு...

DIN


ஒருநாள் தொடரில் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளும் இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கப்பட்டதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற பரபரப்பான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

எனினும் ஆட்ட நாயகன் விருது 95 ரன்கள் எடுத்த சாம் கரணுக்கும் தொடர் நாயகன் விருது இங்கிலாந்து தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டன. இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஆட்ட நாயகன் விருது ஹர்துல் தாக்குருக்கு வழங்கப்படாதது ஆச்சர்யம் அளிக்கிறது. நான்கு விக்கெட்டுகள் எடுத்து பேட்டிங்கில் 30 ரன்களும் எடுத்தார். அதேபோல தொடர் நாயகன் விருதுக்கான போட்டியிலும் புவனேஸ்வர் குமார் இருந்துள்ளார். ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - இதுபோன்ற பேட்டிங் ஆடுகளத்தில் 6 ரன்களுக்குள் இருந்தது. ஆரம்ப ஓவர்களிலும் நடு ஓவர்களிலும் இவர்கள் தான் இரு அணிகளுக்கிடையேயான வித்தியாசங்களாக இருந்தார்கள். இருவரும் பிரமாதமாக விளையாடினார்கள். தொடர் வெற்றிக்கு அவர்கள் இருவரும் முக்கியக் காரணம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT