செய்திகள்

ஐபிஎல்: கரோனா சிகிச்சைக்காக ஆமதாபாத்திலிருந்து சென்னைக்கு வரும் கேகேஆர் வீரர்

தனியார் மருத்துவமனையில் சைஃபர்டுக்கும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. 

DIN

ஐபிஎல்-லில் விளையாடிய நியூசிலாந்து வீரர் டிம் சைஃபர்ட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

கேகேஆர் அணியில் இடம்பெற்றுள்ள டிம் சைஃபர்ட்டுக்கு ஆமதாபாத்தில் எடுக்கப்பட்ட இரு பரிசோதனைகளிலும் கரோனா தொற்று உறுதியானது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிகிச்சைக்காக ஆமதாபாத்திலிருந்து சென்னைக்கு வரவுள்ளார் டிம் சைஃபர்ட். சென்னையில் மைக் ஹஸ்ஸி சிகிச்சை எடுத்துக்கொண்ட தனியார் மருத்துவமனையில் சைஃபர்டுக்கும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. 

கரோனாவிலிருந்து மீண்ட பிறகு சென்னையிலிருந்து நியூசிலாந்து செல்லவுள்ளார் சைஃபர்ட். அங்கு அவர் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு தான் குடும்பத்தினருடன் இணைய முடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

SCROLL FOR NEXT