செய்திகள்

தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முகமது ஷமி

DIN


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வியாழக்கிழமை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 

சௌதாம்ப்டனில் ஜூன் 16-ம் தேதி தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ள முகமது ஷமி தற்போது 14 நாள்கள் தனிமையில் உள்ளார். இந்த நிலையில், அவர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல் ஆளாக மார்ச் முதல் வாரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதையடுத்து, கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே, சேத்தேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரீத் பூம்ரா மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களது முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.  

வீரர்கள் அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசியை பிரிட்டனில் வைத்து செலுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT