இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்சி ஈஸ்ட் பெங்காலை வென்றது.
கோவாவின் வாஸ்கோடகாமா நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் அணிக்காக ராய் கிருஷ்ணா 12-ஆவது நிமிஷத்திலும், மன்வீா் சிங் 14-ஆவது நிமிஷத்திலும், லிஸ்டன் கோலாகோ 23-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். கடுமையாக முயற்சித்தும் ஈஸ்ட் பெங்கால் அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் போனது.
பாம்போலிம் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 11-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணிகள் மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.