செய்திகள்

ஜோ - ராஜீவ் ஜோடி சாம்பியன்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி/அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி சாம்பியன் ஆனது.

DIN

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி/அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி சாம்பியன் ஆனது.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருந்த அந்த ஜோடி இறுதிச்சுற்றில் 3-6, 6-2, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த இங்கிலாந்தின் ஜேமி முா்ரே/பிரேஸின் புருனோ சோரஸ் இணையை வீழ்த்தியது.

ஜோ/ராஜீவ் ஜோடிக்கு இது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். முன்னதாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும் இந்த இணை பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மகளிா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கேட்டி மெக்நாலி/கோகோ கௌஃப் இணை, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசா்/சீனாவின் ஷுவாய் ஸாங் ஜோடியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் ஆரவாரம்; நிஃப்டி 639 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT