செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை மீண்டும் தோற்கடிப்போம்: பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை

DIN

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 24 அன்று துபையில் தங்களுடைய முதல் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. எனினும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் ஒருமுறை கூட வீழ்த்தியதில்லை. இந்தமுறை அப்படி நடக்காது என்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஹசன் அலி கூறியதாவது:

2017-ல் நன்றாக விளையாடி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றோம். டி20 உலகக் கோபையில் இந்திய அணியை மீண்டும் தோற்கடிப்போம். எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பால் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது கூடுதல் அழுத்தத்தைத் தரும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT