செய்திகள்

காமன்வெல்த் அரையிறுதி: இந்திய மகளிர் வெற்றி! 

DIN

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணி 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 32 பந்துகளில் 61 ரன்களும் ஜெமிமா 44 ரன்களும் எடுத்தனர். 

அடுத்து ஆடிய இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 160 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக வியாட் 35 ரன்களை எடுத்தார். அமி ஜோன்ஸ் 31 ரன்களும், நடாலியா சிவேர் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் ஸ்நேகா 2 விக்கெட்டுகளும் தீப்தி 1 விக்கெட்டும் எடுத்தார். 3 ரன் அவுட் செய்து இந்திய மகளிர் அணி அசத்தினர். 

வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இறுதிப் போட்டி ஞாயிற்றுக் கிழமை (ஆக. 7) எட்ஜ்பாட்ஸனில் நடைபெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT