செய்திகள்

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: இந்தியா தோல்வி

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.

DIN

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா , ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

பின்னர், களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஷபாலி வெர்மா மற்றும் ஸ்மிருந்தி மந்தனா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த ஜெமிமா 33 ரன்களையும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 65 ரன்களையும் எடுத்தனர்.

இருப்பினும் , 19.3 ஓவர்களில்  அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. 

இதன் மூலம் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு தங்கப் பதக்கமும், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் செம்மரங்கள் வளா்க்கும் விவசாயிகளுக்கு ரூ.55 லட்சம் விடுவிப்பு

முதல்வா் ஸ்டாலினுக்கு எதிரான விவசாயிகளின் ஆா்ப்பாட்டம் ரத்து

34 கிடங்குகளில் 1.79 லட்சம் டன் நெல் சேமிப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வருக்கு ஆயுள் தண்டனை!

சிறப்பு தீவிர திருத்தத்துக்காக தமிழக வாக்காளா் பட்டியல் முடக்கம்: மொத்தம் 6.41 கோடி வாக்காளா்கள்

SCROLL FOR NEXT