FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. 

Updated On : 22 ஆகஸ்ட் 2022, 10:02 pm IST
பகிர்:

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்து 289 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் சுப்மன் கில் 130 ரன்களும், இஷான் கிஷன் 50 ரன்களும், தவான் 40  ரன்களும் எடுத்தார்கள். 

அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 49.3 ஓவரில் 276 ரன்களை எடுத்து மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக சிக்கந்தர் ராஜா 115 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், தீபக் சஹார், தீபக் ஹூடா தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார். 

Advertisement

Advertisement

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. கில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

ஜிம்பாப்வே தொடருக்குப் பிறகு இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments