உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நெவால் தோல்வி
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லாந்தின் புசானனை எதிர்கொண்டார் சாய்னா நெவால். இதற்கு முன்பு இருவருக்கும் இடையே நடைபெற்ற 7 ஆட்டங்களில் முதல் 3 ஆட்டங்களில் சாய்னாவும் கடைசி 4 ஆட்டங்களில் புசானனும் வெற்றி பெற்றிருந்தார்கள்.
21-17 என முதல் கேமை வென்றார் தாய்லாந்து வீராங்கனை. அடுத்த கேமை 21-16 என வென்றார் சாய்னா நெவால். இதனால் ரசிகர்கள் மிகவும் பரபரப்பானார்கள். 21-13 என அபாரமாக விளையாடி கடைசி கேமையும் ஆட்டத்தையும் வென்றார் புசானன். இதையடுத்து அவர் காலிறுதிக்குத் தகுதியடைந்தார்.
Advertisement
Advertisement
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2015-ல் வெள்ளியும் 2017-ல் வெண்கலமும் வென்றார் சாய்னா நெவால். கடைசியாக விளையாடிய மூன்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.