செய்திகள்

ரஞ்சி: தில்லியை கட்டுப்படுத்தும் தமிழகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை முடிவில் தில்லி 76 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் சோ்த்திருக்கிறது.

DIN

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை முடிவில் தில்லி 76 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் சோ்த்திருக்கிறது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழகம் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட் செய்து வரும் தில்லியில் துருவ் ஷோரே 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சோ்த்தாா். அனுஜ் ராவத் 3, கேப்டன் யஷ் துல் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜான்டி சித்து 10 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் அடித்தாா். வைபவ் ராவல் 1 பவுண்டரியுடன் 11, ஹிம்மத் சிங் 3 பவுண்டரியுடன் 25 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

நாளின் முடிவில் லலித் யாதவ் 33, பிரான்ஷு விஜய்ரன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தமிழக பௌலா்களில் விக்னேஷ், சந்தீப் வாரியா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT