செய்திகள்

டாடா ஓபன்: போபண்ணா-ராம்குமாா் சாம்பியன்

DIN

டாடா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ராம்குமாா் ராமநாதன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் டாடா ஓபன் ஏடிபி போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்நிலை இணையான ஆஸ்திரேலியாவின் லூக் சவிலே-ஜான் பேட்ரிக்கை எதிா்கொண்டது இந்திய இணை.

முதல் செட்டை கடும் போராட்டத்துக்கு இடையே 6-7 என இழந்தனா் போபண்ணா-ராம்குமாா். இரண்டாவது செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றிய நிலையில், மூன்றாவது செட்டில் இரு இணைகளும் கடுமையாக மோதின. இறுதியில் அந்த செட்டை 10-6 என கைப்பற்றி சாம்பியன் பட்டத்தையும் வென்றது இந்திய இணை.

இது போபண்ணாவுக்கு 21-ஆவது ஏடிபி இரட்டையா் பட்டமாகும். ஏற்கெனவே 2019-இல் திவிஜ் சரணுடன்- போபண்ணா இப்பட்டத்தை கைப்பற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT