செய்திகள்

மகன் பிறந்த சில மணிநேரங்களில் சிஎஸ்கேவில் ஷிவம் துபே!

DIN

கிரிக்கெட் வீரர் ஹிவம் துபேயின் மனைவி அஞ்சுமிற்கு இன்று நண்பகல் மகன் பிறந்தது. மகன் பிறந்த சில மணிநேரங்களில் ஷிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வாகியுள்ளார். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், அதிக அளவிலான மகிழ்ச்சி நமது வாழ்வில் அரங்கேறுகிறது. ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். 

அவர் இதனைப் பகிர்ந்த சில மணிநேரங்களில் ஐபிஎல்  ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டார். 

அவருக்கான அடிப்படை தொகையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ. 4 கோடிக்கு சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

ஆல்-ரௌண்டர் ஷிவம் துபே இதுவரை 24 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 399 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 22.17. ஸ்டிரைக் ரேட் 120.54. பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT