இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டமும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மேற்கிந்தியத் தீவுகளில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | கடைசி டி20யில் இலங்கை வெற்றி: தொடரை வென்றது ஆஸி.,
இந்திய அணியிலும் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஏற்கெனவே ஓய்வு அளிக்கப்பட்டது. இதுதவிர புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரும் விளையாடவில்லை.
இவர்களுக்குப் பதில் ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆவேஷ் கான் அறிமுக வீரராகக் களமிறங்குகிறார்.