செய்திகள்

30 வயதில் இலங்கை வீரர் ஓய்வு அறிவிப்பு: மறுபரிசீலனை செய்ய மலிங்கா கோரிக்கை

DIN

30 வயது இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணிக்காக 5 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களில் பனுகா விளையாடியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர் பங்கேற்றார்.

இந்நிலையில் ஓய்வு அறிவிப்பைத் தற்போது வெளியிட்டுள்ளார் பனுகா. இலங்கை கிரிக்கெட்டில் உடற்தகுதி குறித்து புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் காரணமாக பனுகா ஓய்வை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குடும்பச் சூழ்நிலை காரணமாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.

பனுகா இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என பிரபல வீரர் மலிங்கா கூறியுள்ளார். நாட்டுக்காக சர்வதேச அளவில் விளையாடுவது சுலபமல்ல. வீரர்கள் ஏராளமான சவால்களை எதிர்கொள்ளவேண்டும். இலங்கை கிரிக்கெட்டுக்கு பனுகா இன்னும் நிறைய சேவை செய்யவேண்டும். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை பனுகா மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT