முகப்பு
செய்திகள்

ஆஸி. ஓபன்: 4 மணி நேரம் போராடி அரையிறுதிக்கு முன்னேறிய நடால்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் காலிறுதியில் கனடாவைச் சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்...

Updated On : 25 ஜனவரி 2022, 5:29 pm IST
பகிர்:

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் காலிறுதியில் கனடாவைச் சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் பிரபல வீரர் நடால்.

கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் அதில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்றவர் நடால். கடந்த வருடம் விம்பிள்டன், யு.எஸ். ஓபன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. 

இந்த வருடத்தின் முதல் தொடக்க கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் நடால். காலிறுதியில் தரவரிசையில் 14-ம் இடத்தில் உள்ள கனடாவைச் சேர்ந்த 22 வயது டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார். மிகவும் பரபரப்பாக, 4 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற ஆட்டத்தில்  6-3, 6-4, 4-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஷபோவலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் நடால். வயிற்று வலி காரணமாக 4-வது செட்டில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments