மீண்டும் ஏமாற்றிய விராட் கோலி
நீண்ட நாட்களாக மோசமாக விளையாடிவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
நீண்ட நாட்களாக மோசமாக விளையாடிவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று( ஜூலை1) தொடங்கியது. இதில் தொடக்க வீரர்களான சுப்மன் கில் புஜாரா 17, 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து பெரிதும் எதிர்பார்த்த விராட் கோலி ஹனுமா விகாரியுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். 18 பந்தில் 2 பவுண்டரிகள் அடித்திருந்த நிலையில் பாட் வீசிய பந்தில் விளையாடாமல் இருக்க பேட்டை மேலே தோல்லும் போது துரதிஷ்டவசமாக எட்ஜ் வாங்கி போல்ட் ஆனார். ஒவ்வொரு முறையும் விராட் கோலி அவுட் ஆகும் போது ஏதாவது அதிர்ஷ்டமில்லாமலே அவுட் ஆகும் போக்கு தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
விராட் கோலியின் மோசமான ஆட்டம் தொடர்ந்துக் கொண்டே உள்ளது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
Advertisement
கடசியாக விராட் கோலி அடித்த சதம் 2019 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 3வது வருடமாக சதமடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.
இதையும் படிக்க: சச்சின்,அசாரூதின் சாதனையை சமன்செய்த ஜடேஜா,ரிஷப் பந்த்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.