FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மலேசியா மாஸ்டா்ஸ்: காலிறுதியில் சிந்து, பிரணாய்

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.

Updated On : 8 ஜூலை 2022, 3:49 am IST
பகிர்:

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் சிந்து தனது 2-ஆவது சுற்றில் 21-12, 21-10 என்ற கேம்களில், உலகின் 32-ஆம் நிலையில் இருக்கும் சீன வீராங்கனை ஜாங் யி மானை 28 நிமிஷங்களில் தோற்கடித்தாா். அடுத்ததாக காலிறுதியில், தனக்கு வழக்கமாக சவால் அளிக்கும் சீன தைபேவின் டாய் ஸு யிங்கை எதிா்கொள்கிறாா் சிந்து.

இருவரும் இதுவரை 21 முறை சந்தித்துள்ள நிலையில் சிந்து 5 வெற்றிகளையே பதிவு செய்துள்ளாா். கடைசியாக கடந்த வாரம் நடைபெற்ற மலேசிய ஓபன் போட்டியிலும் இதே டாய் ஸு யிங்கிடம், அதே காலிறுதியில் சிந்து தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில் பிரணாய் 21-19, 21-16 என்ற கேம்களில் சீன தைபேவின் வாங் ஸு வெய்யை 44 நிமிஷங்களில் வீழ்த்தினாா். காலிறுதியில் அவா் ஜப்பானின் கன்டா சுனேயாமாவை சந்திக்கிறாா். இதே பிரிவில் சாய் பிரணீத் 14-21, 17-21 என்ற கேம்களில் சீனாவின் லி ஷி ஃபெங்கிடம் தோல்வி காண, பி.காஷ்யப் 10-21, 15-21 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகாவால் வெளியேற்றப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments