செய்திகள்

உலக வாள்வீச்சு: பவானி தேவி போராடி தோல்வி

எகிப்தில் நடைபெறும் உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பவானி தேவி 2-ஆவது சுற்றில் போராடித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

DIN

எகிப்தில் நடைபெறும் உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பவானி தேவி 2-ஆவது சுற்றில் போராடித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

இப்போட்டியில் சீனியா் மகளிா் தனிநபா் சப்ரே பிரிவில் களம் கண்ட பவானி தேவி, முதல் சுற்றில் 15-14 என்ற கணக்கில் கனடாவின் கேப்ரியேலா பகேவை வீழ்த்தினாா். என்றாலும், 2-ஆவது சுற்றில் ஜொ்மனியின் லாரிசா எய்ஃப்லரிடம் 12-15 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தாா்.

தமிழரான பவானி தேவி, கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்று, ஒலிம்பிக்கில் தடம் பதித்த முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா். அந்தப் போட்டியில் அவா் முதல் சுற்றில் வென்று, 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

கடல் பயணம்... கௌரி வினீத்!

ஒவ்வொரு பார்வையிலும் கம்பீரம்... ரூமா சர்மா!

இப்போது மகிழ்ச்சி இவ்வாறு இருக்கிறது... ருக்மணி வசந்த்!

டபிள்யூடிசி தரவரிசையில் 5-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT