செய்திகள்

தினேஷ் கார்த்திக்குக்கு முன்பு அக்‌ஷர் படேலைக் களமிறக்கியது ஏன்?: ஷரேயஸ் ஐயர் பதில்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20யில் தினேஷ் கார்த்திக்குக்கு முன்பு அக்‌ஷர் படேலைக் களமிறக்கியது குறித்து...

DIN


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20யில் தினேஷ் கார்த்திக்குக்கு முன்பு அக்‌ஷர் படேலைக் களமிறக்கியது குறித்து இந்திய பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர் பதில் அளித்துள்ளார்.

தில்லியில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தை வென்ற தென்னாப்பிரிக்க அணி, கட்டாக்கில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 34, ஷ்ரேயஸ் ஐயர் 40, தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்க அணி, 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் பவுமா 35 ரன்களும் கிளாசென் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 81 ரன்களும் எடுத்தார்கள்.

இந்திய அணியின் இன்னிங்ஸின்போது தினேஷ் கார்த்திக்குக்கு முன்பு அக்‌ஷர் படேல் களமிறங்கினார். இதனால் விமர்சனங்கள் எழுந்தன.இதற்குப் பதில் அளித்து இந்திய பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

இதுகுறித்து முன்பே திட்டமிட்டிருந்தோம். ஏழு ஓவர்கள் இருந்தன. அக்‌ஷர் படேலால் சுலபமாக சிங்கிள்களை எடுக்கமுடியும். அப்போது யாராவது ஒருவர் களமிறங்கி உடனடியாக அடித்தாட வேண்டிய நிலைமையிலும் நாங்கள் இல்லை. அதை தினேஷ் கார்த்திக்கால் செய்ய முடியும்  என்றாலும் கடைசி 5 ஓவர்களில் அவர் இந்திய அணியின் மதிப்புமிக்க வீரராக உள்ளார். அவரால் அச்சமயத்தில் உடனடியாக அதிரடியாக விளையாட முடியும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் அவரும் ரன்கள் எடுக்கச் சிரமப்பட்டார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT