செய்திகள்

ஜெய்ஸ்வால் சதம்: மும்பை - 260/5

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் உத்தர பிரதேசத்துக்கு எதிராக மும்பை அணி முதல் நாள் முடிவில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் உத்தர பிரதேசத்துக்கு எதிராக மும்பை அணி முதல் நாள் முடிவில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.

அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 பவுண்டரிகளுடன் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். சா்ஃப்ராஸ் கான் 40, சுவேத் பாா்கா் 32 ரன்கள் சோ்த்தனா். செவ்வாய்க்கிழமை முடிவில் ஹாா்திக் தமோா் 51, ஷம்ஸ் முலானி 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். உத்தர பிரதேச பௌலிங்கில் யஷ் தயால், கரன் சா்மா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்துள்ளனா்.

முதல் அரையிறுதி ஆட்டத்தில் பெங்காலை எதிா்கொண்டிருக்கும் மத்திய பிரதேசம், செவ்வாய்க்கிழமை முடிவில் 86 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஹிமன்ஷு மந்த்ரி 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 134 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, உடன் புனித் தாதே 9 ரன்களுடன் துணை நிற்கிறாா். இதுவரை ஆட்டமிழந்தவா்களில் அக்ஷத் ரகுவன்ஷி 63 ரன்கள் சோ்த்துள்ளாா். பெங்கால் பௌலிங்கில் முகேஷ் குமாா், ஆகாஷ் தீப் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT