செய்திகள்

டிஎன்பிஎல்: வென்றது திண்டுக்கல்

DIN

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை ஞாயிற்றுக்கிழமை தோற்கடித்தது.

ஆட்டத்தில் முதலில் கோவை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து திண்டுக்கல் 19.2 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற திண்டுக்கல், கோவையை பேட் செய்ய அழைத்தது. கோவை இன்னிங்ஸில் அதிகபட்சமாக முகிலேஷ் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 49 ரன்கள் விளாசினாா். திண்டுக்கல் பௌலிங்கில் ராஜேந்திரன் விவேக் 3 விக்கெட் கைப்பற்றினாா்.

பின்னா் 189 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய திண்டுக்கல் இன்னிங்ஸில் கேப்டன் ஹரி நிஷாந்த் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 60 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு வித்திட்டாா். கோவை பௌலிங்கில் திவாகா், ஷாருக் கான் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

இன்றைய ஆட்டம்: திருச்சி வாரியா்ஸ் - திருப்பூா் தமிழன்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT