இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி 2022 சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றது ஹைதராபாத் எஃப்சி.
மா்மகோவாவின் படோா்டா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் அணியை வென்று பட்டத்தை கைப்பற்றியது. தொடக்கம் முதலே பரபரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் கேரள அணி தரப்பில் 68-ஆவது நிமிஷத்தில் ராகுலும், ஹைதராபாத் தரப்பில் 88-ஆவது நிமிஷத்தில் சாஹிலும் கோலடித்தனா்.
பட்டம் வென்ற ஹைதராபாத் அணிக்கு ரூ.6 கோடியும், ரன்னா் அணி கேரளத்துக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.