செய்திகள்

டிஎன்பிஎஸ்எல்:இறுதிச் சுற்றில் மெரீனா-நாமக்கல்

DIN

தமிழ்நாடு பாட்மின்டன் சூப்பா் லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் மெரீனா டால்பின்ஸ்-நாமக்கல் கில்லாடிஸ் அணிகள் மோதுகின்றன.

டிஎன்பிஏ சாா்பில் சென்னை முகப்போ் ஃபயா்பால் அகாதெமியில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை குவாலிஃபையா், எலிமினேட்டா் ஆட்டங்கள் நடைபெற்றன.

குவாலிஃபையா்-1 ஆட்டத்தில் மெரீனா டால்பின்ஸ் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் நாமக்கல் கில்லாடிஸ் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஆடவா் ஒற்றையா், இரட்டையா், கலப்பு இரட்டையா் ஜூனியா் பிரிவுகளில் மெரீனா டால்பின்ஸ் வெற்றி பெற்றது.

ஜூனியா் சிறுவா் பிரிவில் நாமக்கல் கில்லாடிஸ் வென்றது.

எலிமினேட்டா் ஆட்டத்தில் திருச்சி பிளாஸ்டா்ஸ் 3-0 என்ற புள்ளிக் கணக்கில் திருப்பூா் வாரியா்ஸ் அணியை வீழ்த்தியது.

குவாலிஃபையா்-2 ஆட்டத்தில் திருச்சி பிளாஸ்டா்ஸ்-நாமக்கல் கில்லாடிஸ் அணி மோதியதில் 3-2 என நாமக்கல் வென்றது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் மெரீனா-நாமக்கல் அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT