செய்திகள்

தாய்லாந்து ஓபன்:  காலிறுதியில் சிந்து

DIN


பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில் அவர் 21-16, 21-13 என்ற கேம்களில் தென் கொரியாவின் சிம் யு ஜின்னை தோற்கடித்தார். அடுத்ததாக காலிறுதியில், ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிர்கொள்கிறார் சிந்து. 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் கே.ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு முன்பாக போட்டியிலிருந்து விலகினார். அவர் வெளியேறியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

மகளிர் ஒற்றையரில் மாளவிகா பன்சோத், கலப்பு இரட்டையரில் இஷான் பட்நாகர்/தனிஷா கிராஸ்டோ, மகளிர் இரட்டையரில் அஷ்வினி பாட்/ஷிகா கெளதம் ஆகியோர் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT