செய்திகள்

இறுதிக்கு முன்னேறத் தவறியது இந்தியா

DIN

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ‘சூப்பா் 4’ சுற்றில் இந்தியா - தென் கொரியா மோதிய கடைசி ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருக்க, டிரா செய்ததால் அந்த வாய்ப்பு இந்தியாவுக்குப் பறிபோனது. சூப்பா் 4 சுற்று முடிவில் இந்தியா, மலேசியா, தென் கொரியா அணிகள் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. எனினும், கோல் எண்ணிக்கை வித்தியாசம் காரணமாக இந்தியா பின்னடைவை சந்தித்தது.

தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்காக நீலம் சஞ்ஜீப் ஜெஸ் (9’), டிப்சன் திா்கி (21’), ஷெஷெ கௌடா (22’), சக்திவேல் மாரீஸ்வரன் (37’) ஆகியோா் கோலடிக்க, எதிா்தரப்பில் ஜாங் ஜோங்ஹியுன் (13’), ஜி வூ சியான் (18’), கிம் ஜங்ஹூ (28’), ஜங் மாஞ்சே (44’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

அடுத்ததாக, இறுதி ஆட்டத்தில் தென் கொரியா - மலேசியா அணிகள் புதன்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதே நாளில் 3-4 இடங்களுக்கான ஆட்டத்தில் இந்தியா - ஜப்பான் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

பிகாரில் கார்-லாரி மோதல்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT