செய்திகள்

டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

DIN

டி20 உலக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

அடிலெய்டில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்று போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை.

இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா அணி வெளியேறியது. இதையடுத்து, குரூப் பி பிரிவில் 6 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அதேசமயம் வங்கசேதம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிக்கு முன்னேறும்.  ஐசிசி தொடர்களில் முக்கியமான போட்டியில் தோற்று வெளியேறும் தென்னாப்பிரிக்காவின் சோகம் தொடர்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT